×

பூங்காக்களை நவீனப்படுத்த கமிட்டி: எஸ்.ஆர்.ராஜா வாக்குறுதி

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி முழுவதும் தினசரி மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று பெருங்களத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் நடைபாதை  மற்றும் சிறுவர் பூங்காவில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அந்த பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதை கேட்ட எஸ்.ஆர்.ராஜா, ‘நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். பூங்காவுக்கென தனியாக ஒரு கமிட்டி  அமைத்து அதன்மூலம் இப்பகுதியிலுள்ள பூங்காக்கள் அனைத்தையும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

தொகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும், அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அனைவரும் தவறாமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழக முதல்வராக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் தாம்பரம் தொகுதிக்கு விரைந்து செயல்படுத்தப்படும்,’ என்றார். பிரசாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : SR Raja Promise ,
× RELATED பூங்காக்களை நவீனப்படுத்த கமிட்டி: எஸ்.ஆர்.ராஜா வாக்குறுதி